எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்!
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாணவர்கள் தமது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள பல்கலைக்கழங்களில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நிறைவடைந்தவுடன், பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை