ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மைதானத்திற்கு மின்னொளி …

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் கோப்ரா எல்.ஈ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இம்மைதானத்தில் பாவனையில் இருந்த மின்விளக்குகள் பழுதடைந்து, இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த நிலையில் சாய்ந்தமருது கிரிக்கட் சபையின் கோரிக்கையின் பேரில் ரஹ்மத் மன்சூர் அவர்கள் குறுகிய காலத்தில் இம்மைதானத்திற்கு மின்னொளியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தமது கோரிக்கையை துரிதமாக நிறைவேற்றித்தந்த பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்த ரஹ்மத் பவுண்டேசன் செயலாளர் சம்சுல் முனா அவர்களுக்கும் சாய்ந்தமருது கிரிக்கட் சபை நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.