காலிமுகத் திடலில் போராட்டம் இன்று 33ஆவது நாளாகத் தொடர்கிறது
காலிமுகத் திடல் கோட்டா கோகம போராட்டம் இன்று 33ஆவது நாளாக நீடிக்கிறது.
கடந்த 9ஆம் திகதி போராட்ட தளத்தில் மனிதாபிமானமற்ற தாக்குதலில் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில் நேற்று (10) இரவு ஆர்ப்பாட்ட இடத்தில் ஐந்து நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
போராட்ட தளத்தின் முக்கிய மேடைக்கு வந்த அனைத்து மதத் தலைவர்களும் வன்முறையை நிறுத்துமாறு அனைத்து போராட்டக்காரர் களிடம் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துக்களேதுமில்லை