பதவியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்! கடுமையாக எச்சரிக்கை விடுத்த மத்திய வங்கி ஆளுநர்
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடித்தால், தினசரி 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்.
மிரிஹான சம்பவத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அரசியல் ஸ்திரமின்மை நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் இந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை”, எனக் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை