பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான மட்டு நகரில் விசேட ஊடக செயலமர்வு

(உமர் அறபாத் – ஏறாவூர்)

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெஸ்டினா முரளிதரனின் ஆலோசனை வழிகாட்டலின்  கீழ், அருவி பெண்கள் அமைப்பின் அனுசரணையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு கடந்த வியாழக்கிழமை காலை  மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த விசேட செயலமர்வில் சிரேஷ்ட சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான திருமதி மயூரி ஜனன் கலந்துகொண்டு நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் குறித்த தெளிவைப் பெற்றுக்கொண்டனர்.