தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்வி அதிகாரிகள் பாடசாலை சென்று வாழ்த்தினர்

( வி.ரி. சகாதேவராஜா)

தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று வாழ்த்தினார்கள்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அகில இலங்கை தேசிய சமூக விஞ்ஞான போட்டி-2023 பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் சம்மாந்துறை வலயத்தில் மூன்று மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சம்மாந்துறை வலயத்தில் உள்ள மஜீத் புரம் மகா வித்தியாலய மாணவி கே.எம்.எவ். அசீமா,(தரம்12ஃ13), விவேகானந்த மகா வித்தியாலய மாணவி எஸ்.குகதர்சனா,(தரம்-09),இறக்காமம் அஷ்ரப் ம.கல்லூரி எம்.கே..யூசுப்சயான்(தரம்-07) ஆகியோர் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களை அவர்கள் கற்கும் பாடசாலைக்குச்சென்று வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் வாழ்த்தி கௌரவித்தார்கள்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.வை.அறபாத், எ.எல்.எம்.மஜீத், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். நிஷார் ஆகியோர் பாராட்டச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (