நிந்தவூரில் களைகட்டிய உலக ‘புவி நாள்’ நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து 2024 ஆம் ஆண்டு புவி தினத்தை நிந்தவூரில் பரந்த அளவில் கோலாகலமாகக் கொண்டாடியது.

இந்த நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் கடற்கரையை சுத்தம் செய்தல், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம், புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம், பனை விதைகள் நடுதல், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் மரம் நடுதல் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும்  ஊழியர்களுக்கு 100 பலா செடிகள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும். மேலும், டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கும், பொலித்தீன் பெருக்கத்தைத் தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை லயன்ஸ் கழகத் தலைவர் எந்திரி. லயன்  மதுரநாயகம் சுதர்சன் மற்றும் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் அரூப் அர்ஷத் ஆகியோரின் திறமையான தலைமையின் கீழ், பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா லயன்ஸின் சுற்றாடல் தவிசாளர் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரொஷான் காஞ்சன யாப்பா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்ட சமூக சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நிந்தவூர் பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மினா விளையாட்டுக் கழகம், மதீன விளையாட்டுக் கழகம், ஸ்ரீலங்கா ஸ்மார்ட் யூத் விளையாட்டுக் கழகம், பிரதேச சம்மேளன விளையாட்டுக் கழகம் மற்றும் நிந்தவூர் அல்அஸ்ரக் அல்மஸ்ஹர் மற்றும் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் சுற்றாடல் கழகங்கள் ஆகியனவும் உதவின.

சம்மாந்துறை கோல்டன் சிட்டியின் லயன்ஸ் கழகம் மற்றும் சாய்ந்தமருது லயன்ஸ் கழக உறுப்பினர்களும் இந்த முயற்சிக்கு தமது ஆதரவை வழங்கினர்.

இந்நிகழ்வு 2024 பெப்ரவரி 25 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி 11.30 மணியளவில் நிந்தவூர் கடற்கரையில் நிறைவடைந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டுடன் சுமார் 400 நபர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர்.

இந்த பூமி தின கொண்டாட்டம்  சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வை வளர்ப்பதில் ஒத்துழைப்பு மற்றும் சமூக உணர்வின் சக்திக்கு ஒரு சான்றாக நிற்கிறது.

மேலும், கல்முனை நகர லயன்ஸ் கழகம் இவ்வாறான செயற்திட்டங்களைக் காரைதீவு மற்றும் கல்லடி பிரதேசங்களில் இந்த வருடத்தில் முன்னெடுத்துள்ளது. லயன்ஸ்  கல்முனை நகரம் ஏற்பாடு செய்த 3 ஆவது கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் இதுவாகும். (