சர்வதேசமகளிர்தின நிகழ்வுகள் களுவாஞ்சிக்குடியில் ஆரம்பம்!

(வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தால்
‘அவளுடைய பலம் – நாட்டிற்கு முன்னேற்றம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருடம்  கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம்  வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக கலைகள் மற்றும் அரங்க விளையாட்டுகளின் மூலமாக  ‘மகளிர் மனவெழுச்சி ஆற்றுப்படுத்துகை’ எனும் 2 தினங்களைக் கொண்ட  நிகழ்வானது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாம் நாள்  கலந்துகொண்டிருந்த மகளிர் சங்க உறுப்பினர்களின் கலைப்படைப்புகள் மற்றும் கலை நிகழ்வுகள் நடந்தன.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கிராம சேவை பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 45 மகளிர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் வளவாளர்களாக ம. நிரோஷினிதேவி (சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு), வி.சிந்துஉஷா (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் ப. ராஜதிலகன் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகள் யாவும் பகல் நேரப் போட்டியாக அமைந்;ததும் குறிப்பிடத்தக்கது