மாணவர்கள் மற்றும் கல்வியியயலாளர்கள் கிழக்கு சமூகசேவை சபையால் கௌரவம் பிரதம அதிதியாக ஹரீஸ் எம்.பி.

நூருல் ஹூதா உமர்

அரசியல் ஆளுமைகளை நினைவு கூறுதலும், இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கிழக்கு சமூக சேவைச் சபையின் தலைவர் யூ.எல்.ஏ ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்களைக் கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மைமூனா அஹமட், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸீல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். றியாழ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம். ஏ. கலீலூர் ரஹ்மான், ஏ.எம். றியாஸ் (பெஸ்டர்), திருமதி பஸீரா றியாஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாவா, இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், வெகுஜன தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹூதா, கல்முனை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், கல்விமான்கள், நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பல துறைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சுமார் 75 இற்கு மேற்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கப்பட்டதோடு சிறந்த ஆளுமைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(0