தேராவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்.!

 

திருமணம் செய்து நான்கு மாதங்களில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

 

யாழ் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

 

சில தினங்களுக்கு முன்னர் கடும் சுகயீனமுற்று முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

பரமகுரு ஜெகன் வயது 44 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், இவரின் திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது