மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (18) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில், பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.