கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது!

 

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

 

இவர் நேற்று (17) பிற்பகல் 1.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார்.

 

இதன்போது, இவர் கொண்டு சென்ற பற்பசை பொதி ஒன்றுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றும் ஐஸ் போதைப்பொருள் பொதியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இதனையடுத்து சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.