நாட்டில் 40,000 ஆசிரியர் பற்றாக்குறை -நிவர்த்தி செய்யுமாறு கோரிய ஸ்டாலின்

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000 ஆசிரியர் பற்றாக்குறை பதிவாகியுள்ளது கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 3,800 தட்டுப்பாடுகளும், வடமத்திய மாகாணத்தில் 3,698 தட்டுப்பாடுகளும் பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தில் 3,100 தட்டுப்பாடுகள் பதிவாகியுள்ளன மற்றும் மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 6,200 பற்றாக்குறைகள் பதிவாகியுள்ளன.

அரசு செலவினங்களை மீதப்படுத்த ஆசிரியர் நியமனத்தை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது உள்ள வெற்றிட பணியிடங்களை நிரப்பாமல், இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்  நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

“இருப்பினும், அரசாங்கம் மேல் மாகாணத்திற்கு 2,500 ஆசிரியர்களை இரண்டு முறை பணியமர்த்தியது, ஆனால் அவர்கள் முறையாக ஆட்சேர்ப்பு செய்யவில்லை. அடுத்த வாரம் பாடசாலைகள் தொடங்கினாலும், சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிட பணியிடங்களுக்கு உரிய முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.