மூடப்படும் மதுபானசாலைகள்

இலங்கையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

மேலும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வெசாக் பண்டிகையை முன்னிட்டும் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.