மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஹெகலிய

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சந்தேகநபர்கள் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.