எல்ல பகுதியில் இருந்து 10 குடும்பங்கள் இடம்பெயர்வு

எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் இன்று (24) மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தில் முன்பு பெரிய அளவில் நீர் ஓடிக் கசிந்துகொண்டிருந்ததாகவும் , அந்த இடத்தில் நிலமும் விரிசல் ஏற்பட்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

இந்நாட்களில் மழை பெய்யாவிட்டாலும், வறண்ட காலநிலை நிலவி வருவதால், மண்சரிவு அபாயம், அசுத்தமான நீர் ஓடையாக அந்த இடத்தில் ஓடுகிற நிலையில் அக்குடும்பங்கள் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எல்ல பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.