தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும்  வௌியிடப்பட்டுள்ளது.