புங்குடுதீவில் மாட்டிய பசு கொள்ளையர்கள்

யாழ்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் நீண்ட காலமாக பசுகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு இறைச்சியாக்கம் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் பசுவொன்றினை மோட்டார்சைக்கிளில் ( NP GQ 1025 )  கடத்தி இறைச்சியாக்கும் நோக்கில்  கொண்டுசெல்லும்போது குறித்த பிரதேச இளைஞர்களால் மறிக்கப்பட்டு இக்காணொளி பதிவு செய்ப்பட்டுள்ளது .

குறித்த சந்தேக நபர்கள்  நீண்டகாலமாக  இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  நீதித்துறையினர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பிரதேச இளைஞர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.