சூட்சுமமாக கடத்தப்பட்ட தங்க ஜெல் பொதியுடன் சந்தேகநபர் கைது

40 மில்லியன் ரூபா மதிப்பிலான 1975 கிராம் எடை கொண்ட தங்க ஜெல் பொதிகள் இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இன்று (09) காலை டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை சோதனையிட்ட போது அவரது காலணிகள் மற்றும் ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 தங்க ஜெல் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சந்தேகநபர் 25 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.