ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது.

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் பல சாவடிகள் அகற்றப்பட்ட நிலையில் ஓமந்தை சோதனை சாவடி மாத்திரம் நான்கு வருடங்களாக அகற்றப்படாமல் இருந்த நிலையில் அது தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.