கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் தேவையில்லை

கொரோனா காலப் பகுதியில் அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உற்பத்தி நிறுவனமே ஏற்றுக்கொண்டதாகவும், அதனை அவர்கள் முன்பே அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தடுப்பூசி எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை அல்ல எனவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட சில சந்தர்ப்பத்தில் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆகவே, தடுப்பூசி பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.