மின்சாரக் கட்டணக் குறைப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சாரக் கட்டணக் குறைப்பு வீதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்ததுடன், முடிவுகள் கிடைத்த பின்னர் மின்சாரக் கட்டணக் குறைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என மின்சார சபையும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவுகள் மே மாதம் 1ம் திகதி ஆணைக்குழுவிடம் வழங்கப்படவிருந்த நிலையில், மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படாமையால் எதிர்வரும் 10ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.