பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

படையினரால் நிர்மானிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று (18) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நேற்று மாலை சட்டத்தரணி சுதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

டிப்போ சத்தியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் இராணுவத்தினரால் சிறுவர் பூங்கா அமைக்கப்படும் நிலையில் குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் போராட்டத்துக்கான காரணத்தை கேட்டு அமைதிப்படுத்த முனைந்தனர். இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.

தொடர்ந்து, வீதி போக்குவரத்துக்கு இடமளித்து போராட்டம் செய்ய பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பகுதியை சுற்றியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதான வாயிலை மறித்து அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிப்போ சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றி சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் சிறுவர் பூங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.