பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு 

புத்துர் – கனகம்புளியடி வீதியில் பயணித்த இராணுவ  உயரதிகாரிகளின் வாகனம் விபத்துக்குள்ளானதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ள நிலையில் யுவதி நின்ற பகுதிக்கு எதிர்திசையில்
புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வேன் வேகமாக வந்த நிலையில் வீதியில் வலது பக்கம் நின்றுள்ள யுவதியை மோதி, மரத்திலும் அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதி
கவிழ்ந்து விபத்து இடமேற்றுள்ளது.

இதன்போது வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதான யுவதி உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.