தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பம்

2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில்,குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.