மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சிவில் சமுகப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் வடக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துடையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள திருமறை கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் , வலிந்து கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம், கடற்றொழில் அமைப்புக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பில் தமக்கு எந்தவிதமான நம்பிக்கையும் ஏற்படவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.