ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்

 

 

ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்தத் தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

பேட்டியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை மாற்றமடையும் என எதிர்பார்க்கின்றீர்களா?ஆம் என்றால்; சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னர் நிலைமை எவ்வளவு மோசமானதாக காணப்படும் ? அடுத்த சில வருடங்கள் எ எவ்வாறானதாக காணப்படும்?

பதில்-நம்பிக்கைகள் பலனளி;க்காது ஏனென்றால் நம்பிக்கைகள் மனதின் கற்பனையே.

இலக்குகளை அடைவதற்காக நாங்கள் பணியாற்றவேண்டும் – பாடுபட வேண்டும்.

இதன் காரணமாக அமைப்பு முறையில் உண்மையான மாற்றத்திற்கான போராட்டங்கள் -கிளர்ச்சிகள் தொடர வேண்டும்.

தங்கள் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக் கூறக்கூடியவர்களால் ஆளப்படும் ஊழல் அற்ற சமூகத்தையே இவர்கள் கோரி நிற்கின்றனர்.

இதனை நிர்வாக அமைப்பிற்கு வெளியே இருந்து நடைமுறைப்படுத்தவேண்டும்-சட்டபூர்வமாக ஆணை வழங்கப்பட்ட ஆட்சி முறைமையுடன்.

மக்களிற்கு நன்மையளிக்கக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும்,மக்களின் செல்வத்தை கொள்ளைடியக்கும் நிறுவனங்களை நிறுவுவதற்கான சாத்தியத்தை நீக்க வேண்டும்,ஆட்சியாளர்களின் அதிகார துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான உரிய ஏற்பாடுகளை முன்வைக்கவேண்டும்.

இது ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்திற்கான பணிகள்.

ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.