அமைச்சரவையில் இடம்பெறாமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க பத்து கட்சிகள் தீர்மானம் 

 

பத்து கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறாமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கதீர்மானித்துள்ளன என முன்னாள் அiமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியேறிய பத்து கட்சிகள் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளன என தெரிவித்துள்ள அவர் எனினும் இந்த கட்சிகள் எந்த அமைச்சரவையும் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக பிரதமர் நியமித்துள்ள குழுக்களின் நடவடிக்கைகளில் இணைந்துகொள்வோம் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமரை இன்று சந்தித்த பின்னரே இதனை தெரிவித்துள்ள அவர் அனைவரையும் தங்கள் கட்சி வேறுபாடுகளை கைவிட்டுவிட்டுநெருக்கடிகளிற்னு தீர்வை காண்பதற்கான கூட்டுமுயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.