மே 9 ம் திகதி வன்முறைகளை மகிந்த ராஜபக்சவே தூண்டிவிட்டார்- முஜிபூ

மே 9 ம் திகதி வன்முறைகளை மகிந்த ராஜபக்சவே தூண்டிவிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாம் திகதி அலரிமாளிகையில் மகிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்த பேரணியில் வன்முறை தூண்டப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள முஜிபூர் ரஹ்மான் அந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் நாமல்ராஜபக்சவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர் காலிமுகத்திடலிற்கு செல்லும் பேரணிக்கு அவரை தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரை படையினரை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கு ஜனாதிபதியும் இடமளித்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரம் இருந்தபோதிலும் அவர்கள்வீடுகளை பாதுகாக்க தவறினார்கள் மெதமுலானவில் ஜனாதிபதியின் மூதாதையர் இல்லத்தை கூட காப்பாற்றமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.