தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  வேலணையில் நினைவேந்தல் (  படங்கள் இணைப்பு )

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  ஊர்காவற்துறை தொகுதி கிளையின்  ஏற்பாட்டில்  வேலணை  பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இன்று
காலை 11 மணியளவில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது .
மாவீரர்களின்  பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில்  யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் ,  வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன்  நாவலன் , பிலிப் பிரான்சிஸ் , அ. மேரி மற்றில்டா , சு . பிரகலாதன் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.