முப்பது வருட கால இனப்படுகொலை யுத்தம் – சந்திரிகா கருத்து

நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது- அது வெற்றியல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்
நேற்றைய பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
நாட்டையோ மனித இனத்தையோ யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது- அது வெற்றியல்ல
முப்பது வருடகால இனப்படுகொலையுத்தத்தில் நாங்கள் பெருமளவு விடயங்களை இழந்துள்ளோம்.
தென்பகுதி வடபகுதி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர்.
நாங்கள் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என பிளவுபட்டோம்.
நான் ஒரு கண்ணை இழந்தேன் – யுத்தத்தினால் – மேலும் பல இழப்புகளை எதிர்கொண்டேன்.
யுத்தமுடிவை கொண்டாடும் இந்த தருணத்தில் குரோதத்திற்கு பதில் அன்பை வெளிப்படுத்துவோம்.
பழிவாங்குவதற்கு பதில் மன்னிப்போம்.
பிரிந்திருப்பதை விட இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாகயிருப்போம்.
எங்கள் இதயத்தில் தீமையை எழுப்புவதற்கு இறைவனை எழுப்புவோம்- இன்றைய நாளை உறுதிப்பாடு மற்றும் சமாதானத்திற்கான நாளாக மாற்றுவோம்.
உலகிற்கு அன்பை காண்பிப்போம்,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.