கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தால் ஒருவர் கைது.
கஞ்சா போதைப்பொருளினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23/05 திங்கட்கிழமை இரவு சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் கச்சாய் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைதாகியிருந்தார்.உதவி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேராவின் வழிநடத்தலில்,சாவகச்சேரி மதுவரித் திணைக்கள மதுவரி பரிசோதகர் வே.ரசிகரன் தலைமையிலான குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.கைதான சந்தேக நபரிடம் இருந்து 8கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டிருந்தனர்.இந்நிலையில் 24/05 செவ்வாய்க்கிழமை சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியதில் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2022/05/IMG-6d700e465ecb9cfc2d6fbd6be7a158b0-V.jpg)
கருத்துக்களேதுமில்லை