இலங்கையர்கள் மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலராக வீழ்ச்சி!
இலங்கையர்கள் மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலராக வீழ்ச்சி!
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பணம் அனுப்பும் தொகையை துரிதமாக அதிகரிக்க வேண்டும் என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளரான மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் பொருளாதாரத்துக்கு ஆதரவாக பணம் அனுப்பு வதை உறுதி செய்வதில் பெரும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கிகள் ஊடாக இலங்கைக்கு டொலர்களை அனுப்பும் இலங்கைப் பணியாளர்கள் பல நன்மைகளுக்கு உரித்துடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
![May be an image of money](https://scontent.fcmb1-2.fna.fbcdn.net/v/t39.30808-6/283641671_2146701838845318_6923932604882562107_n.png?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=QaWoXxJV28oAX93g15x&_nc_ht=scontent.fcmb1-2.fna&oh=00_AT9xPQnwEzwysZ1yThPwvvButXwkHkyOl459a96-ZVA44g&oe=6292966B)
கருத்துக்களேதுமில்லை