புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு வரணி ஒன்றியத்தால் மடிக்கணனி.

சாவகச்சேரி நிருபர்
இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த தென்மராட்சி- வரணி பிரதேச மாணவர்கள் 16 பேருக்கு 29/05/2022 ஞாயிற்றுக்கிழமை மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சிய வரணி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யா/இடைக்குறிச்சி சுப்பிரமணிய வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரனும்,சிறப்பு விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவனும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.