பொன் சிவகுமாரனின் 48 வது நினைவேந்தல் பிரதேச சபையினால் அனுஷ்டிப்பு

 

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்;சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்  அஞ்;சலி செலுத்தப்பட்டது. அஞ்;சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் அணிவித்தார். அதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்;சலி செலுத்தினர். மலரஞ்;சலியை அடுத்து தமிழ்த் தேசியத்தில் சிவகுமாரனின் பங்கு பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
வருடா வருடம் பொன். சிவகுமாரன் அவர்களது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.