நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு !!

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கமு/கமு/ இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 72 வருடகால பாடசாலையின் வரலாற்றில் வலய மட்டத்தில் பெரு விளையாட்டு நிகழ்வு ஒன்றில் இப்பாடசாலை முதன் முறையாக 16 வயது பிரிவு ஆண்களுக்கான வொலிபோல் விளையாட்டில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கல்முனை கல்வி வலயத்தில் இவ் விளையாட்டில் பெரும் தூண்களான நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலை மற்றும் அல் பஹ்ரியா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் அணிகளை வீழ்த்தி இவ் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.