நீராடச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் நேற்று மாலை சிறுவன் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் நீராட சென்ற போதே இவ்வரு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்.
இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ஹஷான் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன சிறுவனை பொலிசார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் தேடி வருகின்றனர். மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

” எனது பிள்ளையை என்னிடம் கொண்டு வந்து தாருங்கள்… உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். மகனே உன்னை என்னால் காப்பாற்ற முடியவில்லை… நீ செல்வதை பார்த்துக் கொண்டு என்னால் எப்படி உயிர் வாழ முடியும் மகனே..!!!”

ஹஷானின் தாய் கண்ணீர் வடிக்கிறார்.

இதேவேளை, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகண்டிய பிரதேசத்தில் உள்ள DC கால்வாயில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ பொத்துவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.