தீக்காயங்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை 50 வீதம் அதிகரிப்பு -சத்திரசிகிச்சை நிபுணர்.

அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெற்றோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் கயான் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்த நாட்களில் வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு பெற்றோல் கிடைக்கிறது.மேலும், வீடுகளில் எண்ணெய் தேக்கி வைப்பதால் இது போன்ற ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

பெற்றோலைக் கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதிகம் எனவும் கலாநிதி கயான் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.