கொடிகாமத்தில் வாள் வெட்டு;இளைஞன் படுகாயம்….
சாவகச்சேரி நிருபர்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதிப் பகுதியில் 22/06 புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைச் சேர்ந்த 26வயதான குறித்த இளைஞன் தனது உறவினர் ஒருவருடன் கொடிகாமம் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் இனந்தெரியாத நபர்கள் இளைஞன் மீது வாள் வீச்சு தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை