இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக ஜப்பான் உறுதி – ஜனாதிபதி

இலங்கையின் அபிவிருத்தியை நோக்கிய இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி உறுதியளித்துள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை ஜப்பான் தொடர்ந்து பேணுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.