மட்டு. போதனா வைத்தியசாலைக்கு தானாகவே முன்வந்து  டீசல் விநியோகம் செய்த மட்டக்களப்பு IOC உரிமையாளர்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இன்று மட்டக்களப்பு ஐ.ஓ.சி ஊடாக டீசல்  விநியோகிக்கப்பட்டதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு .ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சுகாதார மருத்துவ பாதுகாப்பு நலன் கருதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவி வண்டிகள் (அம்புலன்ஸ்) மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கியதுடன் இதன்போது எரிபொருளை பெற்றுக்கொள்ள வீதிகளில் காத்திருந்த வாகன சாரதிகளும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசா தெரிவித்துள்ளார்.
இவரது திடீர் செயற்பாட்டையிட்டு தாம் பெரிதும் மகிழ்சியடைவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.