கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிறா 28 தங்கத்துடன் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சம்பியனாக தெரிவு

நூருள் ஹுதா உமர்
இம்மாதம் 4, 5ம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில்  நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 21 வெள்ளி மற்றும் 7 வெண்கள பதக்கங்களையும் பெற்று மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 08 அஞ்சலோட்ட போட்டிகளில் 5 முதலிடமும், 2 இரண்டாமிடங்களையும் பெற்று அஞ்சலோட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்ப்பட்டதுடன், ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிப்பிரிவில் 131 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.