நற்குண முன்னேற்ற அமைப்பால் தென்மராட்சியில் உதவித்திட்டம்.
சாவகச்சேரி நிருபர்
நற்குண முன்னேற்ற கழகத்தினால் கடந்த வியாழக்கிழமை தென்மராட்சி-மந்துவில் பிரதேசத்தில் வறுமை நிலையில் உள்ள 250குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தலா மூவாயிரம் ரூபாய் பெறுமதியிலான குறித்த உதவித்திட்டம் சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் கு.குகானந்தனின் ஏற்பாட்டில் மந்துவில் வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை