எரிபொருள் கிடைக்காவிட்டால் அம்பாறையில் நெற்செய்கை அழிவடையும் அபாயம்

-சி.எல்.சிசில்-

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


நெல் அறுவடைக்குத் தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை நெல் அறுவடை சரியான முறையில் அறுவடை செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படுவதாகக் கூறப்படும் அரிசித் தட்டுப்பாடு மேலும் மோசமடையலாம் என விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.