செல்லும் இடத்தை அடைந்த பின்னரே இராஜினாமா கடிதத்தை அனுப்ப கோட்டா தீர்மானம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை தான் செல்லும் இடத்தை அடைந்த அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்வின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலையில் இலங்கை விமானப் படையின் போக்குவரத்துக் கப்பலில் நாட்டை விட்டுப் புறப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவுகளை அடைந்து, அங்கிருந்து தான் செல்ல வேண்டிய நாட்டை நோக்கிப் பறந்தார் என தெரியவருகிறது .
கருத்துக்களேதுமில்லை