இம்மாதம் நடைபெறவிருந்த சில பரீட்சைகள் இரத்து
-சி.எல்.சிசில்-
நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, இம்மாதம் 15, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பல பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானிய குடிவரவு சேவை முகவர் நிலையத்தினால் அறிவிக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் பின்வருமாறு:
- ஜப்பானிய மொழியின் அடிப்படை சோதனை (JFT அடிப்படை)
- தாதியர் திறன் பரீட்சை
- உணவு பதப்படுத்தும் திறன் சோதனை
மேலும், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேற்கூறிய பரீட்சைகளின் திகதிகள் (குறிப்பிடப்பட்ட திறமையான தொழிலாளர் திட்டம் – SSWP) திருத்தப்பட வேண்டும் அல்லது இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜப்பான் குடிவரவு சேவை முகவர் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை