QR முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டம்

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர் சமூகத்தினர் இணைந்து  ஆரம்பித்துள்ளனர்.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பெற்றோல் நிலையங்களுக்கு அருகில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அத்தோடு இவர்கள்  வீடு வீடாகச் சென்று பொதுமக்களை தெளிவுபடுத்தி வருகின்றனர்.

இங்கு QR குறியீடு ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தங்களிடம் வைத்திருக்க அல்லது அவர்களுக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் காட்சிப்படுத்த QR குறியீட்டின் அச்சிடப்பட்ட நகல்கள் வழங்கப்படும்.

எரிபொருள் பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தை நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.