சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு : சுகாதார அமைச்சு

-சி.எல்.சிசில்-

டெங்கு, கொவிட் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான மருத்துவர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

தற்போதைய வைரஸ் காய்ச்சல் தொடர்பில் பெரியவர்கள் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.