கொள்கலன் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம்

-சி.எல்.சிசில்-

பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கலன்களுக்கு போதுமான எரிபொருளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


QR குறியீட்டின் கீழ் போதுமான எரிபொருளைப் பெறாமல் தனது சேவையைத் தொடர முடியாது என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்துச் சங்கம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றிரவு முதல் மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.