பெரும் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கு டீசல் விநியோகிக்கபட்டது! E
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெரும் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் உழவு இயந்திரங்களுக்கு இன்றைய தினம் (14) இருபாலை கமக்கார அமைப்புகளின் ஏற்பாட்டில் நல்லூர் பலநோக்கு கூட்டுறவு எரிபொருள் நிலையத்தில் டீசல் விநியோகிக்கபட்டது.
பெரும் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் நூற்றுகணக்கானோர் குறித்த “டீசல்” விநியோகத்தினுடாக பயன் அடைந்ததாக கமக்கார அமைப்பினர் தெரிவித்தனர்.
(-தங்கராசா ஷாமிலன்.)
கருத்துக்களேதுமில்லை